திங்கள், 23 ஜனவரி, 2012

திட்டம் போட்டு திருடற கூட்டம்...!

வங்கிகளின் சேவைகளை நெடுங்காலமாக, அன்றாடம் பயன்படுத்தி வருபவன் என்ற முறையிலும், இந்தியாவின் பல்வேறு பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளின் செயல்பாடுகளை அனுபவத்தின் மூலமாகவும், பல்வேறு உறவினர்கள், உயர்பதவிகளில் பணிபுரிவதால், அவர்களுடன் தொடர்ந்து உரையாடுவதன் மூலமாகவும் அறிந்தவன் என்ற முறையிலும், இந்தச் செய்தியின் முக்கியத்துவம் கருதி, ஒரு அவசரப் பகிர்வு. 5 நிமிடங்கள் மட்டுமே பிடிக்கும் வகையில் சுருக்கமாக...தொடர்ந்து படியுங்கள் நட்புகளே...

1. சமீபத்தில், பெங்களூரு நகரின் முக்கிய பகுதியில் இருந்த பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம். கணக்கிலிருந்து, பெரும் பணம் திருடப்பட்டுள்ளதாக 2 நபர்கள் போலீசில் புகார் தெரிவித்தனர். ( பெயர்கள் அவசியமில்லாததால் குறிப்பிட வில்லை)

2. போலீசாரின் விசாரணையில், வங்கியின் ஏ.டி.எம் கருவி பழுது பட்டிருந்ததால், பணம் எடுக்க முடியாமல் வாடிக்கையாளர்கள் திரும்பியுள்ளதாக தெரிய வந்தது.!

3. ஏ.டி.எம். வீடியோ பதிவை ( சி.சி.டி.வி.) ஆய்வு செய்தபோது, ஒரு குறிப்பிட்ட வாலிபன் நடவடிக்கைகள் சந்தேகத்திற்கு இடமாக இருந்ததால், அனைத்து ஏ.டி.எம். மையங்களும் உஷார் படுத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டன.!

4. சில நாட்களில், அந்த வாலிபனை போலீசார் மடக்கி, விசாரித்தபோது, பணம் திருடுவதற்கு, அவன் பயன்படுத்திய நூதன டெக்னிக் பின்வருமாறு.!

அ. ஏ.டி.எம். மையங்கள் உள்ள பகுதியில் வந்து நோட்டமிட்டு, வாடிக்கையாளர்கள் இல்லாத சமயம், ஏ.டி.எம். மிஷினின் "என்டர் கீ" பகுதியில், ஒரு தீக்குச்சியை சொருகி வைத்துவிட்டு வெளியே சென்று, சிறிது தொலைவில் நின்று கண்காணிப்பான்.!

ஆ. வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம். மையாத்திற்கு வந்து, தகவல்களை பதிந்து,
பணம் வெளியே வராததால் ( என்டர் கீ பகுதியில் தீக்குச்சி இருப்பதால் பணம் வெளியே வராது), நொந்துபோய் வெளியேறி விடுவார்கள்.!

இ. சிறிது நேரம் கழித்து, யாரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்ட பின்னர், அந்த இளைஞன், குறிப்பிட்ட ஏ.டி.எம். மையத்தினுள் நுழைந்து, தீக்க்குச்சியை எடுத்த பின்னர், பணம் வெளியே வந்து கொட்டும். அதை எடுத்துக்கொண்டு நைசாக நழுவி விடுவான்.!

ஈ. இந்த டெக்னிக்கை பயன்படுத்தி, பல இடங்களில் பணத்தை திருடியுள்ளதாக அவன் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளதால், போலீசார் தொடர்ந்து விசாரனையை முடுக்கி விட்டுள்ளதாக செய்தி.!


5. நட்புகளே...பெரும்பாலான சமயங்களில், வங்கி அலுவல் நேரம் முடிந்த பின்போ, அல்லது வங்கிக்கு தொலைவில் உள்ள ஏ.டி.எம். மையங்களிலோ தான் மக்கள் பணம் எடுக்கின்றனர்....அல்லது பயன்படுத்த முயற்சி செய்கின்றனர். எனவே, நாம் நினைத்தாலும், ஏ.டி.எம். மிசின் செயல்படவில்லை என்ற தகவலை வங்கிக்கு தெரிவிக்க இயலாது.! இந்த நிலை அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தும்.!

6. ஆகாவே, ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்க நினைக்கும்போது, வங்கியுடன் இணைந்துள்ள மையங்களில், வேலைநேரத்தில் (BANK WORKING HOURS) பணம் எடுப்பது நமக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்.

7. பிரச்சினையே இல்லாத முறை (CONVENTIONAL METHOD) பழைய நிலை தான். நேரடியாக, காசோலை அல்லது பணம் எடுக்கும் சலானை பயன்படுத்துவது(CHEQUE OR WITHDRAWAL SLIP)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக