செவ்வாய், 16 ஆகஸ்ட், 2011

நாங்களும் துப்புரவு தொழிலாளிகள்தான்

மதம் என்ற மலச்சாக்கடையில் எல்லாவகை மலமும் கலந்து கிடக்கின்றன. அதில் என் மலம்தான் சிறந்தது என ஒவ்வொரு பிரிவினரும், பெருமை பீத்திக் கொண்டிருக்கின்றனர். அது குல்லா போட்ட குலாமோ, குர்தா போட்ட பாதிரியாரோ, பூணூல் போட்ட பூசாரியோ எல்லோருமே எங்களுக்கு ஒன்றுதான்.எங்களுக்கு எல்லா மலமும் நாறும் என்ற அறிவு மட்டும்தான் தெரிகிறது.
.
மதத்தை பேசி எப்படி ஒரு கூட்டம் ஏமாற்றுகிறதோ அதே போல் நாத்திகத்தை பேசி ஏமாற்றும் நாத்திக வியாபாரிகளும் நாட்டில் இருக்கத்தான் செய்கிறது. அந்த கூட்டம்தான் போயஸ் தோட்டத்திலும், கோபாலபுரத்திலும் பிச்சை எடுக்கிறது.அதை அறிவால்தான் கண்டு கொள்ள முடியும். எனவேதான், சிந்திக்கும் அறிவை பயன்படுத்துங்கள் என சொல்லிக் கொண்டிருக்கிறோம்.
.
அல்லாவை,இயேசுவை விட்டுவிட்டு ஏன் இந்துகடவுள்களை மட்டும் அதிகம் பேசுகின்றோம் என்றால், " செப்டிக் டேங்க்கில்" எது நிரம்பி வழிந்து நாற்றமெடுக்கிறதோ அதைதானே முதலில் சுத்தம் செய்ய வேண்டும். மற்ற இரண்டிலும் இறைவன் என்ற பெயரில் ஓரிருவரைத்தான் குறிப்பிடுகின்றனர். அதனால் கழிவு கொஞ்சம்தான். நாற்றமும் குறைவுதான். ஆனால், இந்து மக்களைப் போலவே, இந்துக் கடவுள்களும் அதிகம். அப்ப கழிவும், நாற்றமும் அதிகமாகத்தானே இருக்கும்.
.
வாய் கிழிய பேசும் எந்த இந்து நம்பிக்கைவாதிகளாலும் தன் மத கடவுள்கல்(!) எத்தனை என்று கூற முடியாது. காரணம், 30 ஆண்டுகளுக்கு முன் இருந்த எண்ணிக்கையைவிட இப்போது புதுகடவுள்கல்(!) உற்பத்தி பெருகிவிட்டது. (வியாபாரம் பெருகணும் இல்ல?)
.
வாடிகனோ,மெக்காவோ அல்லது திருப்பதியோ எந்த வியாபார இடமும் சாக்கடைதான். உண்மையை சொல்லப் போனால் அவ்வளவு பெரிய சாக்கடையை சுத்தம் செய்வது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது. அதனால்தான், சாக்கடையில் கலக்கும் மனிதர்களை தடுத்து சுத்தம் செய்ய முயற்சி செய்கின்றோம். இனியும் செய்வோம். ஏனென்றால், ஒருவகையில் நாங்களும் துப்புரவு தொழிலாளிகளே !

1 கருத்து: