செவ்வாய், 21 பிப்ரவரி, 2012
"ஹெர்னியா". இது பல பேருக்கு தெரியாத ஒரு விஷயம் ஆம் ஹெர்னியா ஒரு நோய் இல்லை இது ஒரு ரிப்பேர் தான். ஆம் சிம்பிள் ஹார்ட்வேர் ரிப்பேர் மாதிரி, ஒரு எக்ஸ்டர்னல் இஞ்சூரி மாதிரி தான் இதுவும். நம் நெஞ்சு எலும்புக்கும், பிறப்புருப்புக்கும் ஒரு பை போன்ற தசை வயிற்றின் கீழ் பகுதியில் இருக்கும் இந்த மெஷ் ( ஒரு ஹாமோக் போல ) இருக்கும் இந்த தசைதான் நம் குடலை தாங்கிபிடிக்கும் ஒரு பை போன்றது. இந்த தசை கொஞ்சம் ஸ்ட்ராங்காக இருக்கும் ஒரு பையை போன்றது. இந்த தசை டேமேஜ் ஆகும்பட்சத்தில் குடல் இறங்கி இது தான் குடல் இறக்கம் எனக்கூட அழைக்கப்டுகிறது. தொப்புள் கொடிக்கு நேர் கீழே தான் இந்த தசை கிழியும் வாய்ப்பு உள்ளது. இது சிலருக்கு மோசமாகி சிறு நீர் பை டேமேஜ் ஆகி பிறப்புறுப்பு அருகே மிகுந்த வீக்கத்துடன் இருக்கும்.
மொத்தன் ஐந்து வகை ஹெர்னியாக்கள் தான் ஃபேமஸ்
1. Inguinal hernia / 2. Incisional hernia / 3. Femoral hernia / 4. Umbilical hernia / 5. Hiatal hernia
சில பாடி பில்டர்ஸ், வெயிட் தூக்கும் சாம்பியன்ஸ், கடினமாக உழைக்கும் மூட்டை தூக்கும் தொழிலாளிக்கு தான் இந்த ஹெர்னியா வரும் என சிலர் நினைப்பர். சிலர் நன்கு சாப்பிட்டு ஒரு ஹெவி தும்மல் அல்லது தும்மலுடன் சேர்ந்த இருமல் வந்தாலும் இந்த தசை கிழிந்து ஹெர்னியா வரும் ஆபத்து உண்டு. சிலருக்கு ஹெர்னியா இருப்பது தெரியவே தெரியாது. ஆனால் சிலருக்கு வலி சும்மா அடி பின்னி எடுத்துவிடும். சில ஆண்களுக்கு விரை வீக்கம் மற்றூம் சின்ன லம்ப் எனப்ப்டும் கட்டி போன்ற ஒன்று இருக்கும் பட்சத்தில் உடனே சர்ஜரி தான் சரியான வைத்தியம்.
பெண்களுக்கு இது வரும் காரணம் முக்கியமாக ஓவர் வெயிட், வயிறு பகுதிகளில் வெயிட் போடுவது, அடிக்கடி பிரசவித்தல், அஸ்சைட்ஸ் எனும் திரவகம் அதிகமாக வயிற்றில் சுரத்தல், இயற்கை பிரசவம் சரியாக ஆகாமல் நிறைய நேரம் துடிக்கும் போது, வைற்றில் பெரிய கட்டி போன்ற விஷயங்களுக்கு கண்டிப்பாக ஹெர்னியா நிச்சயம். பெண்கள் புகை பழக்கம் கூட மெயின் ரீஸன் அதனால் இது ஆண்களுக்கு மட்டும் வரும் ஒரு பிரச்சினை இல்லை. சாப்பிட்ட பிறகு வயிற்றின் பெல்ட், பேன்ட், மற்றும் பாவாடை, சுரிதார் பாட்டத்தை அட்ஜ்ஸ் செய்யவே கூடாது. சாப்பிடும் முன் செய்யலாம் அல்லது சாப்பிட்ட பிறகு 2 மணி நேரம் கழித்து செய்யலாம். கர்ப்பபை எடுத்த தாய்மார்களுக்கு ஹெவியாக வேலை செய்தால் ஹெர்னியா நிச்சயம்.
ஹெர்னியா இருந்தால் வலி மற்றும் அதிகம் தொல்லை இல்லாததால் உடனே அவர்கள் அறுவை சிகிச்சை செய்ய மறந்துவிடுவார்கள். ஆனால் உடனே செய்வது மேலும் தசை கிழியாமல் தடுக்க இயலும். ஒரு ஆர்டிஃபிஸியல் மெஷ் வைத்து பழைய மாதிரி தைத்து விடுவார்கள். எனக்கு தெரிந்து டாக்டர்கள் அந்த சமயம் அப்பன்டிக்ஸ் இருந்தால் அதையும் எடுத்து விடுவார்கள். அதிக கொழுப்பையும் முடிந்த வரை எடுத்து விடுவர்கள். இப்பல்லாம் ஃபுல் அறுவை சிகிச்சை தேவை யில்லை லேப்ராஸ்கொபிக் சர்ஜரி (துழை) போதும், ரத்த சேதம் அதிகம் இல்லை மற்றூம் 3 நாட்களீல் டிஸ்சார்ஜ் ஆகலாம். அப்புறம் குடம் மற்றும் வெயிட் தூக்கவே கூடாது. அப்படி தூக்கினால் அந்த மெஷூம் கிழிந்து இன்னொரு ரிப்பேர் சர்ஜரி தேவை. முடிந்த அளவு ஹெல்தியா இருந்தா இது வர்ரது கஷ்டம் அல்லது நல்ல அப்டமன் கரன்ச் செய்தால் கூட இந்த சதையை ஸ்ட்ராங்காக வைத்து கொள்ளலாம். சாப்பிட்ட அரை மணி நேரத்திற்க்கு எந்த வேலையும் கண்டிப்பாக செய்ய வேண்டாம், நடப்பது கூட. முட்டியை மடக்கி வெயிட் தூக்குவது இன்னொரு கேர்ஃபுல் அட்வைஸ்...!
செவ்வாய், 7 பிப்ரவரி, 2012
இன்று சிம்பிள் சைன்ஸில் நாம் பார்க்க போவது போன் மேரோ..... நிவாரனமே இல்லை என நினைத்த பல நோய்களுக்கு அற்புத நிவாரனி இந்த போன் மேரோ ஆம் 1968 ஆம் ஆண்டு தான் இதை பயன்படுத்தி வெற்றி கண்டனர். இந்தியாவுக்கு இது தெரிய ஆரம்பித்தது என்னவோ 2002 தான். லுக்கிமியா,அப்பளாஸ்டிக் அனிமியா, லிம்ப்ஹோமாஸ், ஹாட்கின் டிஸிஸ்,மல்டிபிள் மைலோமா, உடம்பின் இம்மியூன் டிஸார்டர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதாம். அது போக மார்பக புற்று நோய், மற்றூம் கருப்பைக்கு உள்ளே இருக்கும் ஒவேரியன் புற்று நோய்க்கு ஆப்ட் மருந்து. ஒவ்வொரு வருடமும் லட்சக்கனக்கில் மக்கள் இந்த போன் மேரோவால் காப்பற்ற பட்டாலும் இன்னும் உலகின் 70% சதவிகித மக்களுக்கு சரியான போன் மேரோ கிடைக்கமல் அவதி படுகின்றனர்.
போன் மேரோ என்பது நம் எலும்பில் உள்ள ஒரு வகை பஞ்சு போல் இருக்கும் ஒரு விஷயம் தான். மார்பக எலும்பு, தலை(மன்டை ஓடு),இடுப்பு எலும்பு, ரிப்கேஜ், மற்றூம் முதுகு தண்டு பகுதியில் உள்ள எலும்புகளில் இரண்டு வகை ரத்த செல்கள் உற்பத்தி ஆகின்றன. இதில் வெள்ளை நிறத்தில் இருக்கும் செல்களின் பெயர் லியோக்கசைட்ஸ் - இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் செல்கள், சிவப்பு நிறத்தில் இருக்கும் செல்களின் பெயர் - எரித்ரோசைட்ஸ், இது நமது உடம்பின் உள் தேவைப்படும் ஆக்ஸிஜனை கொடுப்பதும் மற்றும் தசை, மற்ற உறுப்புகளின் கழிவுகளை வெளியேற்றும் ஒரு அற்புத வேலையை செய்கிறது. இதை ரெட் போன் மேரோ, யெல்லோ போன் மேரோ என்ற டெக்னிக்கல் நேம் உண்டு.
நான் மேற்கூரிய நோய்கள் ஏதாவது உங்களுக்கு வந்தால் அதனால் சில பாகங்கள் செயலிழுக்கும், அது போக புற்று நோயின் தாக்கம் எல்லோர்க்கும் தெரியும் அதனால் கீமோ தெரபி பண்ணினால் தான் இது கட்டுபாட்டுக்குள் வரும், இது ஏற்பட காரணம் ரெட்செல்களின் உபயோகமில்லா தன்மை தான் அதனால் போன் மேரோ செய்தால் 100% சதவிகிதம் நீங்கள் புற்று நோயில் இருந்து கூட குணம் பெற இந்த போன் மேரோ செல்கள் உபயோகபடுகின்றன. ஒரு சராசரி மனிதன் 70 கிலோ இருந்தால் அவன் உடம்பில் சுமார் 3 கிலோ அல்ல்து 4% சதவிகிதம் போன் மேரோ இருக்கும்.பிறக்கும் போது எல்லா போன் மேரோவும் சிவப்பாக இருந்து காலபோக்கில்தான் மஞ்சளாக மாறும்.
போன்மேரோ டோனர்கள் நிறைய இருந்தாலும் இதை நம் உடம்புக்கு மேட்ச் செய்வது தான் பெரிய விஷயம். இது மேட்ச் ஆனாலும் இதை உடம்பில் செலுத்துவது நரக வேதனை, இதை ஆப்ரேஷன் தியேட்டரில் செய்ய வேண்டிய அவசியம் இல்லை சாதாரன தனி ரூமில் செலுத்தலாம்,இந்த போன் மேரோ செயவதற்க்கு முன் பல டெஸ்ட்கள் உள்ளன, அதில் குறிப்பாக மனநல மருத்துவர் கவுன்சலிங், ஏன் என்றால் முதுகு தண்டு அல்ல்து இடுப்பின் எலும்பில் ஊசியை கொண்டு முதலில் கெட்ட செல்களை வெளியே எடுத்து பின்பு போன்மேரோ செல்களை உள் செலுத்துவார்கள் மயக்க மருந்து மற்றூம் அனஸ்தீஸியா இல்லாமல் முதல் மூனு வாரங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அது செட்டாகி போன பிறகு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி செல்கள் உருவாகி பின்பு 100% குணமடைய 3 - 9 மாதங்கள் பிடிக்கும். இது கொஞ்சம் காஸ்ட்லியான பிராசஸ் கூட. பல நாடுகளில் சிங்கம் முதல் சுறா வரை சில சீக்ரட் ரெசிப்பி சாப்பாட்டுவைகைகள் இந்த போன் மேரோவை வளர்ப்பதாக ஒரு கூடுதல் தகவல். நம்மூர் ஆட்கள் நல்லி எலும்பு மற்றூம் சில எழும்புகளை உள்ளே இருப்பதை தட்டி தட்டி உறுஞ்சும் போது ஒரு வகை பிரவுன் கலர் கூழ் சாப்பிட்டா கூட போன்மேரோ செல்கள் வளரும் என நம்பிக்கை.
சனி, 4 பிப்ரவரி, 2012
உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைத்து ஆரோக்கியத்தை அதிகரிப்பதில் அக்ரூட்டுக்கு முதலிடம் கொடுக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். உடலில் கொழுப்பின் அளவு அதிகரித்தால் மாரடைப்பு உள்ளிட்ட இதய பாதிப்புகள் தாக்கும் அபாயம் ஏற்படும். உடல் பருமன் மற்றும் கொழுப்பு சத்தால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு உணவு முறைகளே முதல் காரணமாக கூறப்பட்டாலும் போதிய உடற்பயிற்சி இன்மையும் ஒரு காரணம். இந்நிலையில் இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் ‘வால்நட்’ எனப்படும் அக்ரூட் கொட்டை உடல் கொழுப்பை எளிதில் கரைத்து ஆரோக்கியத்தை அதிகரிப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பென்சில்வேனியாவில் உள்ள ஸ்க்ராட்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இது தொடர்பாக ஆய்வு நடத்தினர். உடலில் கொழுப்பு அதிகம் இருந்த ஆண், பெண் ஏராளமானோர் வயது வித்தியாசமின்றி தேர்வு செய்யப்பட்டனர். முதல்கட்ட பரிசோதனைகளை தொடர்ந்து ஒரு வார காலம் அக்ரூட் பருப்புகள் கொடுத்து கண்காணிக்கப்பட்டனர். அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவு குறைந்திருந்தது. இதன்மூலம் கொழுப்பை அக்ரூட் கரைக்கும் என்பது உறுதி செய்யப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
ஆய்வு முடிவு குறித்து வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் வருமாறு: உடலில் கொழுப்புச்சத்து அளவாக இருப்பது அவசியம். உணவு முறைகளே உடலில் கொழுப்பு அதிகரிக்க முக்கிய காரணம். அக்ரூட், உடல் கொழுப்பை எளிதில் கரைக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. முந்திரி, பாதாம் உள்ளிட்ட சுமார் 7 வகையான கொட்டைகளுடன் ஒப்பிடும் போது அக்ரூட்டில்தான் ஆன்டி ஆக்சிடன்ட்கள் அதிகம் உள்ளது. குறிப்பாக பாலிபெனால் என்ற ஆன்டிஆக்சிடன்ட் அபரிமிதமாக இருப்பதுதான் இதற்கு காரணம். இவை கொழுப்பை எளிதில் கரைக்க வல்லது என்பதுடன் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். இது நோய்த்தாக்குதலில் இருந்து பாதுகாப்பு அளித்து ஆரோக்கியத்துக்கு வகை செய்யும். உரிய உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி, மருத்துவ அறிவுரை மற்றும் சிகிச்சைகள் மூலம் உடல் கொழுப்பை கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வியாழன், 2 பிப்ரவரி, 2012
பிளாஸ்டிக், பேப்பர் கப் இரண்டுமே ஆபத்து...!
ஐ.டி., கம்பெனியில் வேலை பார்க்கும் என் நண்பர் ஒருவர், தினமும் இரவில், வயிற்று வலியால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார். பல பரிசோதனைகள் செய்து பார்த்தபின், அவர் வயிற்று வலிக்கான காரணத்தை சொன்னார் டாக்டர். அதாவது, அவர் வயிற்றில் மெழுகு இருந்ததாம். அந்த மெழுகு, அவர் வயிற்றில் எப்படி வந்தது என்பதை, பல கேள்விகள் கேட்டு, டாக்டர் ஒரு முடிவுக்கு வந்துள்ளார், அதாவது, நண்பர் தன் ஆபீஸ் கேன்டீனில் பயன்படுத்தும், பேப்பர் "கப்'களில், டீ, காபி குடிப்பது வழக்கம்! அந்த, "கப்'கள் மூலமாகத்தான், நண்பர் வயிற்றில் மெழுகு அதிகமாகி, வயிற்று வலிக்கு காரணமாக இருந்தது என்று கூறியுள்ளார் டாக்டர்.
அவர் மேலும், தற்காலத்தில் பெரும்பான்மையான அலுவலகக் கேன்டீன்களில், "பேப்பர் கப்'களை பயன்படுத்தி வருகின்றனர். மலிவான, தரம் குறைந்த காகிதங்களால் செய்யப்படும் "கப்'கள், தண்ணீராலோ, திரவத்தாலோ கரைந்து விடக் கூடாது என்பதற்காக, அதன் உட்புறங்களில், மெழுகு பூசப்படுகிறது.
இப்படி மெழுகு பூசப்பட்ட "கப்'களில், மிக சூடான, டீயோ, காபியோ நிரப்பப்படும் போது, அந்த வெப்பம் காரணமாக, "கப்'பிலிருக்கும் மெழுகு உருகி, டீ அல்லது காபியுடன் கலந்து, நம் வயிற்றுக்குள் சென்று விடுகிறது. அது, நாளடைவில், வயிற்றில் பல உபாதைகளை தோற்றுவிக்கிறது.
"டீ, காபி அருந்துவதற்கு, கண்ணாடி அல்லது செராமிக் "கப்'களே சிறந்தவையாகக் கருதப்படுகின்றன. ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் டம்ளர் களையும் உபயோகிக்கலாம். ஆனால், எந்த நிலையிலும் பிளாஸ்டிக் அல்லது காகிதத்தாலான, "கப்'களை உபயோகிக்க கூடாது. இல்லையேல், ஆரோக்கியத்தை பலிகொடுக்க வேண்டி வரும்...' என்று கூறினார் டாக்டர்.
அவர் கூறிய இந்த அறிவுரைகள், விலை மதிப்பில்லாதது; அனைவரும் அதை பின்பற்ற வேண்டும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)



