புதன், 4 ஜூலை, 2012


கடவுள் பொருள் - ஒரு ஆயவறிக்கை பலர் அட்லீஸ்ட் நூற்றுகணக்கானோர் இதை எனக்கு கேட்டு எழுதியிருந்தனர் இது என்ன ஒன்னும் புரிய மாட்டெங்குது என்று, நானும் பிசிக்ஸ் பிச்சிகிச்சி ரகம் தான் ஆனாலும் அறிவியல் மேல் கொண்ட காதலால் நன்கு புரிந்து எழுத ஒரு நாள் அவகாசம் தந்தமைக்கு நன்றி. விஞ்சானிகள் உலகம் முழுவது அல்லும் பகலுமாய் ஒவ்வொரு துறையில் ஆய்வுகளை நடத்தி கொன்டுதான் இருக்கிறார்கள். அதில் ஒன்று தான் இந்த "ஹிக்ஸ் பாஸன்" (Higgs Boson) எனும் இயற்பியல் பற்றிய ஆய்வு. ஆம் இதை சிம்பிளாக சொல்வதென்றால் உலகம் எப்படி உருவானது அந்த உருவான உலகத்தில் ஒரு பொருளுக்கு (உதாரணமாக அல்வா எப்படி ஒன்றுடன் ஒன்று ஒட்டி கொள்கிறது, கஞ்சி எப்படி கோர்வையாக இருக்கிறது) என்பதெல்லாம் விஞ்சானிகளை பொறுத்த வரை இது ஒரு அனுகூட்டு நடப்பு என்பதை நம்புகின்றனர். சின்ன வயதில் ஃபார்முலா படித்திருப்பீர்கள் (H2O ) என்றால் என்ன தண்ணீர் ஆனால் அதில் ஹைட்ரஜனும் ஒரு ஆக்சிஜன் ஆட்டமும் கலந்தது தான் தண்ணீர். அதனால் தான் தண்ணீரின் இயல்பு ஒத்து இருக்கும் தண்ணியை அளக்கலாம் ஆனால் எண்ண முடியாது இப்படி ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு வேதியல் கோட்பாடு இருக்கிறது இதற்க்கு காரணம் அனுகூட்டல், கழித்தல் தான். அனுவின்றி இந்த உலகம் அசையாது என்பது இன்று வரை ஆத்திகனும் நாத்திகனும் நம்பும் ஒரு வசனம். உலக விஞ்சானிகள் எல்லாம் சேந்து (CERN )செர்ன் எனப்படும் ஆய்வு கூட்டு தலைமையில் (Large Hadron Collider) லார்ஜ் ஹார்டன் கொல்லைடர் என்னும் ஒரு பெரிய 27 கிலோமீட்டர் சுற்று பாதையில் பிரஞ்சு நாடு மற்றூம் ஸ்விஸ் நாட்டின் எல்லையில் அதாவது பூமிக்கு அடியில் சுமார் 300 அடிக்கு கீழே இதை அமைத்தனர். இதை அமைக்க சுமார் பத்து ஆண்டுகள் ஆயின. 1998ல் ஆரம்பித்து 2008 ஆம் ஆண்டு நிறைவு பெற்றது.இதை உருவாக்க நூறு நாடுகளில் இருந்து 10,000 விஞ்சானிகள் தேவைப்பட்டது. அது போக நூற்றுகணக்கான ஆய்வு கூடங்கள் மற்றூம் யூனிவர்ஸிட்டிகள் இதை முடிக்க கை கோர்த்தன. இதுவும் ஒரு வகை அனு உலை போல் ஆனால் இதில் புரோட்டான் நியூட்ரான் இல்லாமல் புரோட்டானை ஒரு புறம் ஃபையர் பண்ணிவிட்டு இன்னொரு புறம் இன்னொரு புரோட்டானை அனுப்பி இரண்டும் மோதிகொள்ள செய்து அதை பல ஹை ஸ்பீடு கேம்ராக்கள் சென்சார்கள் மற்றும் ப்ல கண்கானிப்பு கருவி மூலம் ஏதாவது ஒரு புதிய பொருள் கண்டுபிடிக்க முடிகிறதா என்பது தான் இந்த ஆய்வு. 10 செப்டம்பர் 2008 ஆம் ஆண்டு இதை முதலில் ஃபையர் செய்தார்கள் ஆனால் 9 நாட்களில் மின்சார கசிவினால் மேக்னடிக் குவென்ச் ஆகி இந்த ஆய்வு தடைப்பட்டது அது போக நிரைய இடத்தில் சேதம் வேற, ஒரு வழியாக எல்லாம் சரி செய்யபட்டு 13 மாதங்கள் கழித்து 20 நவம்பர் 2009 ஆம் ஆண்டு திரும்பவும் இரண்டு புரோட்டான்களை எதிர் திசையில் ஃபையர் செய்யபட்டது. அப்படி எதிர் திசையில் நடந்த புரோட்டன் அணுவின் பயணம் மார்ச் 30 201ஒ ஆம் ஆண்டு எதிர்பார்த்த மாதிரி ரெண்டும் மோதிக்கொண்டு விஞ்சானிகள் எதிர்பார்த்த ரிஸல்ட் கிடைத்தது. இதன் வேல்யூ 3.5 டி ஈ வி பீம் (3.5 TeV beam) அதாவது மனித இனத்தில் மேனுவலாக உருவாக்கபட்ட ஹையெஸ்ட் அணு மோதல் இதுதான். இந்த ஆய்வு மேலும் தொடர்ச்சியாக நடத்தபட்டு 2012 ஆம் ஆண்டு வரை அதாவது போன வாரம் வரை செயல்பட்டு அதில் கிடைத்த இந்த அதிசிய பொருள் தான் காட் பார்டிக்கள். ஆம் இந்த சுற்றுபாதை திரும்பவும் மூடுவதற்க்கு 20 மாதங்கள் ஆகும். அப்படி மூடின பாதயை திரும்பவும் 2014 ஆம் மறு ஆய்வுக்கு பயண்படும். 1960 ஆம் ஆண்டுகளின் பெல்ஜியமும், அமெரிக்காவும் இணந்து இந்த பூமி உருவான விஷயம் இந்த பொருளினால் தான் என்று ஒரு வேதியல் பொருளை கைகாட்டினர் பீட்டர் ஹிக்ஸ்(Peter Higgs), அதை பெருமளவில் கண்டுபிடித்த விஞ்சானி பெயர் கூட சூட்டினர்கள் அதுதான் "ஹிக்ஸ் பாஸம்" என்னும் ஒரு பொருள். இந்த ஆய்வில் நமது இந்தியர் முன்னாள் வங்காளி சுரேத்ரனாத் போஸ் கூட ஒரு தலைமை விஞ்சானி என்பதில் நமக்கு பெருமை. இந்த ஹிக்ஸ் பாஸம் தான் மாஸ் எனப்படும் ஒன்றை இந்த பூமியை உருவாக்கி கடல், வானம், பூமி இதெல்லாம் ஒன்றாக இருக்கும் மாஸ் விஷயத்தை ஆய்வில் கண்டுபிடித்தனர். இந்த மாஸ் தான் ஒன்ரை இன்னொறுடன் சேர்க்க வைக்கிறது என்று கண்டுபிடித்தனர். அதன் பின் இப்போது செய்யபட்ட ஆய்வில் இன்னுமொரு மாய பொருள் உள்ளதை கண்டுபிடித்திருக்கின்றனர் செர்ன் மற்றும் இன்னுமொரு ஆய்வு கூட்டம் இரண்டு சேர்ந்து நேற்று கூட்டறிக்கையில் ஆம் உலகத்தில் இன்ன்மொரு மாய சக்தி ஒன்றை இரண்டு புரோட்டான் அணுவின் மோதலால் கண்டுபிடித்தோம் இதற்க்கு சிலர் கடவுளின் பொருள் (God's Particle) என கூறினாலும் இது இயற்பியல் தான் உறுதிபடுத்தியுள்ளனர் என ஒரு சேர கூறினர். இதை விஞ்சானிகள் பெரிய சந்தோஷத்துடன் கூறிய காரணம் உலகத்தில் இதை வைத்து இன்னும் பெருமளவில் கேன்சருக்கு மருந்து, புது வகை எனர்ஜி, புது வகை மின்சாரம், புரோட்டான் தெரபி, சூரிய மின்சாரம் மாற்று வழிகள்,கிளவுட் கம்ப்யூட்டிங் அட்வான்ஸ் மெத்தட் போன்ற விஷயங்களுக்கு இந்த ஆய்வு பயன்படும் என்று தெரிவித்து இருந்தனர். அடுத்து என்ன இதுவரை இந்த பூமிபந்து உருவான காரணம் வெறும் 4% சதவிகித உண்மையே ஆய்வில் கண்டுபிடித்திருந்தனர். இதன் மூலம் மீதம் உள்ள 96% சதவிகித காஸ்மோ ரகசியங்கள் வெளிவரும் என விஞ்சானிகள் நம்புகின்றனர். இந்த் ஆய்வுக்கு இது வரை 1000 கோடி டாலர்கள் செலவாகியுள்ளது என்பது கூடுதல் தகவல்.

ரத்தத்தின் சுத்தமே...!

இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள சில டிப்ஸ்… உடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும். இயற்கை உணவுகள் மூலம் இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படி? இரத்தத்தை விருத்தி செய்வது எப்படி என்பதை பார்ப்போம். பீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும். இதுதவிர, செம்பருத்திப் பூவை நடுவில் இருக்கும் மகரந்தத்தை தவிர்த்து சுத்தி உள்ள இதழ்கள் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர வெட்டை சூடு தீர்ந்து இரத்தம் விருத்தியாகும். முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும். நாவல் பழம் தினமும் சாப்பிட்டால் கூட இரத்தம் விருத்தி ஆகிறது. இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது. தக்காளிப் பழம் சாப்பிட்டு வந்தால் கூட இரத்தம் சுத்தமாகும். ஆனால், வாத நோய் உள்ளவர்கள் தவிர்த்தல் நல்லது. இலந்தைப் பழம் சாப்பிட்டால் இரத்தத்தை சுத்தம் செய்வது மட்டுமில்லாமல், சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும். பசியையும் தூண்டும் தன்மை கொண்டது. இன்றைய காலகட்டத்தில் பெரும் அச்சுறுத்தல் இரத்தக் குழாய் அடைப்பு. இதனை சாதாரணமாய் தவிர்த்துவிடலாம் என்கிறது இயற்கை வைத்தியம். தினமும் ஒரு கப் தயிர் சாப்பிட்டு வந்தால் போதும் இரத்தக் குழாய் அடைப்பு நீங்கும். இதற்கடுத்தது இரத்தம் அழுத்தம். இதனை முற்றிலுமாக போக்க வழி உண்டு. கொதிக்க வைத்து ஆறிய நீரில் சீரகப் பொடி 12 நேரம் ஊறவைத்து குடித்து வந்தால் போதும். மேலும், ஒரு டம்ளர் மோரில் எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து சாப்பிட்டால் இரத்த அழுத்தம் சீர்படும். இதுதவிர, அகத்திக் கீரையை வாரம் 2 முறை சாப்பிட்டு வந்தாலும் இரத்தக் கொதிப்பு குணமாகும். இரத்தக்கட்டு, சுளுக்கு நிவர்த்தியாக, மஞ்சள், உப்பு, சுண்ணாம்பு ஆகியவற்றை வெந்நீர் விட்டு அரைத்து அந்த விழுதை சூடு செய்து சுளுக்கின் மீது பற்றுபோட்டால் போதும். விளாம்பழம் சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள கிருமிகள் அழிந்துபோகும். - Abi Abirami, Thanjai MJ Moorthy மற்றும் Peace Meditate உடன் பிடித்திருக்கிறது · · பகிர்தல் ·