புதன், 22 ஆகஸ்ட், 2012


டயர் வாங்கும்போது கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள் வாகனங்களின் பாதுகாப்பில் மிக முக்கிய பங்கு வகிப்பது டயர்கள் என்று கூறினால் மிகையாது. பாதுகாப்பு மட்டுமின்றி மைலேஜிலும் இவற்றின் பங்கு மகத்தானது. எனவே, வாகனங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட அளவுடைய டயரை பொருத்துவதே சாலச் சிறந்தது. ஒவ்வொரு டயரிலும் இதற்கான விபரங்கள் குறியீடு மூலம் கொடுக்கப்பட்டிருக்கும். எனவே, டயர் வாங்கும்போது அந்த குறியீடுகளை பார்த்து தெரிந்து கொண்டு வாங்கினால், உங்கள் வாகனத்துக்கு சிறந்த டயரை எளிதாக தேர்வு செய்யலாம். டயர்களின் பக்கவாட்டில் கொடுக்கப்பட்டிருக்கும் குறியீடுகளும் அதன் விபரங்களையும் காணலாம். உதாரணமாக, (35PSI)MAX PRESS என்று ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் குறியீட்டு எழுத்துக்கள் அந்த டயரின் அதிகபட்ச காற்றின் அழுத்த அளவை குறிக்கும். அதற்கு மேல் காற்றின் அழுத்தம் இருக்கக் கூடாது. அடுத்ததாக, 215/65R14 89H M+S என்று கொடுக்கப்பட்டிருந்தால், அதில், 215 என்பது அந்த டயரின் அகல அளவு மில்லிமீட்டரில் குறிக்கப்படுகிறது. அடுத்து 65 என்று குறிக்கப்பட்டிருக்கும் எண்கள் அந்த டயரின் பக்கவாட்டு உயரத்தை குறிக்கும். R என்ற ஆங்கில எழுத்து ரேடியல் டயர் என்பதை குறிக்கும். இதுதவிர, சாதாரண டயர்கள் B மற்றும் D ஆகிய ஆங்கில எழுத்துக்களில் குறிக்கப்பட்டிருக்கும். 14 என்ற எண்கள் டயரின் உள் விட்டம் அல்லது ரிம் அளவை குறிக்கிறது. அடுத்து 89 என்று குறிக்கப்பட்டிருந்தால், அந்த டயர் அதிகபட்சம் 580 கிலோ எடையை சுமக்கும் திறன் கொண்டது. அடுத்து இந்த வரிசையில் கடைசியில் குறிக்கப்பட்டிருக்கும் ஆங்கில எழுத்து அந்த டயர் அதிகபட்சமாக செல்லும் வேகத்தை குறிக்கும். உதாரணமாக, H என்ற ஆங்கில எழுத்து குறிக்கப்பட்டிருந்தால் அந்த டயர் அதிகபட்சம் மணிக்கு 210கிமீ வேகத்தில் செல்வதற்கு லாயக்கானது என்று அர்த்தம்.(டயர் வேக அளவின் குறியீட்டு எழுத்துக்கள் விபரம் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும், M+S என்று குறிக்கப்பட்டிருந்தால், சேறு மற்றும் பனி படர்ந்த சாலைகளில் செல்ல ஏதுவானது என்றும், அனைத்து கால நிலைகளுக்கும் ஏற்றது என்று பொருள் கொள்ளலாம். இதேபோன்று, ஓல்டு ஸ்டாக் டயரை கண்டுபிடிப்பதற்கும் வழி இருக்கிறது. டயரில் ஆங்கிலத்தில் DOT GHYT 1212 என்று குறிக்கப்பட்டிருந்தால் அதில், கடைசியில் வரும் முதல் 12 என்ற எண்கள் 12வது வாரத்தையும், இரண்டாவது 12 எண்கள் 2012ம் ஆண்டையும் குறிக்கும். அதாவது, மார்ச் மாதம் 2012ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட டயர் என்று அர்த்தம். மேலும், இதில் GHYT என்ற எழுத்தில் முதல் இரண்டு ஆங்கில எழுத்துக்கள் தயாரிப்பு நிறுவனத்தின் குறியீடு, அடுத்த இரு எழுத்துக்கள் அந்த டயரின் தயாரிப்பு குறியீடு. எதிர்காலத்தில் டயரில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால், குறிப்பிட்ட இந்த எழுத்துக்களை அடிப்படையாக கொண்டு திரும்ப பெறப்படும். டயரின் ஆங்கில எழுத்து குறியீடும் அதன் அதிகபட்ச வேக திறன் விபரம்: M- 130 Kmph P-150 Kmph Q-160 Kmph R-170 Kmph S-180 Kmph T - 190 Kmph H - 210 Kmph V - 240 Kmph W - 270 Kmph Y - 300 Kmph ZR - over 240 Kmph ( பின் குறிப்பு) டயரில் காற்று இருகின்றதா என்று பார்க்கவும்,,,,

புதன், 4 ஜூலை, 2012


கடவுள் பொருள் - ஒரு ஆயவறிக்கை பலர் அட்லீஸ்ட் நூற்றுகணக்கானோர் இதை எனக்கு கேட்டு எழுதியிருந்தனர் இது என்ன ஒன்னும் புரிய மாட்டெங்குது என்று, நானும் பிசிக்ஸ் பிச்சிகிச்சி ரகம் தான் ஆனாலும் அறிவியல் மேல் கொண்ட காதலால் நன்கு புரிந்து எழுத ஒரு நாள் அவகாசம் தந்தமைக்கு நன்றி. விஞ்சானிகள் உலகம் முழுவது அல்லும் பகலுமாய் ஒவ்வொரு துறையில் ஆய்வுகளை நடத்தி கொன்டுதான் இருக்கிறார்கள். அதில் ஒன்று தான் இந்த "ஹிக்ஸ் பாஸன்" (Higgs Boson) எனும் இயற்பியல் பற்றிய ஆய்வு. ஆம் இதை சிம்பிளாக சொல்வதென்றால் உலகம் எப்படி உருவானது அந்த உருவான உலகத்தில் ஒரு பொருளுக்கு (உதாரணமாக அல்வா எப்படி ஒன்றுடன் ஒன்று ஒட்டி கொள்கிறது, கஞ்சி எப்படி கோர்வையாக இருக்கிறது) என்பதெல்லாம் விஞ்சானிகளை பொறுத்த வரை இது ஒரு அனுகூட்டு நடப்பு என்பதை நம்புகின்றனர். சின்ன வயதில் ஃபார்முலா படித்திருப்பீர்கள் (H2O ) என்றால் என்ன தண்ணீர் ஆனால் அதில் ஹைட்ரஜனும் ஒரு ஆக்சிஜன் ஆட்டமும் கலந்தது தான் தண்ணீர். அதனால் தான் தண்ணீரின் இயல்பு ஒத்து இருக்கும் தண்ணியை அளக்கலாம் ஆனால் எண்ண முடியாது இப்படி ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு வேதியல் கோட்பாடு இருக்கிறது இதற்க்கு காரணம் அனுகூட்டல், கழித்தல் தான். அனுவின்றி இந்த உலகம் அசையாது என்பது இன்று வரை ஆத்திகனும் நாத்திகனும் நம்பும் ஒரு வசனம். உலக விஞ்சானிகள் எல்லாம் சேந்து (CERN )செர்ன் எனப்படும் ஆய்வு கூட்டு தலைமையில் (Large Hadron Collider) லார்ஜ் ஹார்டன் கொல்லைடர் என்னும் ஒரு பெரிய 27 கிலோமீட்டர் சுற்று பாதையில் பிரஞ்சு நாடு மற்றூம் ஸ்விஸ் நாட்டின் எல்லையில் அதாவது பூமிக்கு அடியில் சுமார் 300 அடிக்கு கீழே இதை அமைத்தனர். இதை அமைக்க சுமார் பத்து ஆண்டுகள் ஆயின. 1998ல் ஆரம்பித்து 2008 ஆம் ஆண்டு நிறைவு பெற்றது.இதை உருவாக்க நூறு நாடுகளில் இருந்து 10,000 விஞ்சானிகள் தேவைப்பட்டது. அது போக நூற்றுகணக்கான ஆய்வு கூடங்கள் மற்றூம் யூனிவர்ஸிட்டிகள் இதை முடிக்க கை கோர்த்தன. இதுவும் ஒரு வகை அனு உலை போல் ஆனால் இதில் புரோட்டான் நியூட்ரான் இல்லாமல் புரோட்டானை ஒரு புறம் ஃபையர் பண்ணிவிட்டு இன்னொரு புறம் இன்னொரு புரோட்டானை அனுப்பி இரண்டும் மோதிகொள்ள செய்து அதை பல ஹை ஸ்பீடு கேம்ராக்கள் சென்சார்கள் மற்றும் ப்ல கண்கானிப்பு கருவி மூலம் ஏதாவது ஒரு புதிய பொருள் கண்டுபிடிக்க முடிகிறதா என்பது தான் இந்த ஆய்வு. 10 செப்டம்பர் 2008 ஆம் ஆண்டு இதை முதலில் ஃபையர் செய்தார்கள் ஆனால் 9 நாட்களில் மின்சார கசிவினால் மேக்னடிக் குவென்ச் ஆகி இந்த ஆய்வு தடைப்பட்டது அது போக நிரைய இடத்தில் சேதம் வேற, ஒரு வழியாக எல்லாம் சரி செய்யபட்டு 13 மாதங்கள் கழித்து 20 நவம்பர் 2009 ஆம் ஆண்டு திரும்பவும் இரண்டு புரோட்டான்களை எதிர் திசையில் ஃபையர் செய்யபட்டது. அப்படி எதிர் திசையில் நடந்த புரோட்டன் அணுவின் பயணம் மார்ச் 30 201ஒ ஆம் ஆண்டு எதிர்பார்த்த மாதிரி ரெண்டும் மோதிக்கொண்டு விஞ்சானிகள் எதிர்பார்த்த ரிஸல்ட் கிடைத்தது. இதன் வேல்யூ 3.5 டி ஈ வி பீம் (3.5 TeV beam) அதாவது மனித இனத்தில் மேனுவலாக உருவாக்கபட்ட ஹையெஸ்ட் அணு மோதல் இதுதான். இந்த ஆய்வு மேலும் தொடர்ச்சியாக நடத்தபட்டு 2012 ஆம் ஆண்டு வரை அதாவது போன வாரம் வரை செயல்பட்டு அதில் கிடைத்த இந்த அதிசிய பொருள் தான் காட் பார்டிக்கள். ஆம் இந்த சுற்றுபாதை திரும்பவும் மூடுவதற்க்கு 20 மாதங்கள் ஆகும். அப்படி மூடின பாதயை திரும்பவும் 2014 ஆம் மறு ஆய்வுக்கு பயண்படும். 1960 ஆம் ஆண்டுகளின் பெல்ஜியமும், அமெரிக்காவும் இணந்து இந்த பூமி உருவான விஷயம் இந்த பொருளினால் தான் என்று ஒரு வேதியல் பொருளை கைகாட்டினர் பீட்டர் ஹிக்ஸ்(Peter Higgs), அதை பெருமளவில் கண்டுபிடித்த விஞ்சானி பெயர் கூட சூட்டினர்கள் அதுதான் "ஹிக்ஸ் பாஸம்" என்னும் ஒரு பொருள். இந்த ஆய்வில் நமது இந்தியர் முன்னாள் வங்காளி சுரேத்ரனாத் போஸ் கூட ஒரு தலைமை விஞ்சானி என்பதில் நமக்கு பெருமை. இந்த ஹிக்ஸ் பாஸம் தான் மாஸ் எனப்படும் ஒன்றை இந்த பூமியை உருவாக்கி கடல், வானம், பூமி இதெல்லாம் ஒன்றாக இருக்கும் மாஸ் விஷயத்தை ஆய்வில் கண்டுபிடித்தனர். இந்த மாஸ் தான் ஒன்ரை இன்னொறுடன் சேர்க்க வைக்கிறது என்று கண்டுபிடித்தனர். அதன் பின் இப்போது செய்யபட்ட ஆய்வில் இன்னுமொரு மாய பொருள் உள்ளதை கண்டுபிடித்திருக்கின்றனர் செர்ன் மற்றும் இன்னுமொரு ஆய்வு கூட்டம் இரண்டு சேர்ந்து நேற்று கூட்டறிக்கையில் ஆம் உலகத்தில் இன்ன்மொரு மாய சக்தி ஒன்றை இரண்டு புரோட்டான் அணுவின் மோதலால் கண்டுபிடித்தோம் இதற்க்கு சிலர் கடவுளின் பொருள் (God's Particle) என கூறினாலும் இது இயற்பியல் தான் உறுதிபடுத்தியுள்ளனர் என ஒரு சேர கூறினர். இதை விஞ்சானிகள் பெரிய சந்தோஷத்துடன் கூறிய காரணம் உலகத்தில் இதை வைத்து இன்னும் பெருமளவில் கேன்சருக்கு மருந்து, புது வகை எனர்ஜி, புது வகை மின்சாரம், புரோட்டான் தெரபி, சூரிய மின்சாரம் மாற்று வழிகள்,கிளவுட் கம்ப்யூட்டிங் அட்வான்ஸ் மெத்தட் போன்ற விஷயங்களுக்கு இந்த ஆய்வு பயன்படும் என்று தெரிவித்து இருந்தனர். அடுத்து என்ன இதுவரை இந்த பூமிபந்து உருவான காரணம் வெறும் 4% சதவிகித உண்மையே ஆய்வில் கண்டுபிடித்திருந்தனர். இதன் மூலம் மீதம் உள்ள 96% சதவிகித காஸ்மோ ரகசியங்கள் வெளிவரும் என விஞ்சானிகள் நம்புகின்றனர். இந்த் ஆய்வுக்கு இது வரை 1000 கோடி டாலர்கள் செலவாகியுள்ளது என்பது கூடுதல் தகவல்.

ரத்தத்தின் சுத்தமே...!

இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள சில டிப்ஸ்… உடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும். இயற்கை உணவுகள் மூலம் இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படி? இரத்தத்தை விருத்தி செய்வது எப்படி என்பதை பார்ப்போம். பீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும். இதுதவிர, செம்பருத்திப் பூவை நடுவில் இருக்கும் மகரந்தத்தை தவிர்த்து சுத்தி உள்ள இதழ்கள் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர வெட்டை சூடு தீர்ந்து இரத்தம் விருத்தியாகும். முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும். நாவல் பழம் தினமும் சாப்பிட்டால் கூட இரத்தம் விருத்தி ஆகிறது. இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது. தக்காளிப் பழம் சாப்பிட்டு வந்தால் கூட இரத்தம் சுத்தமாகும். ஆனால், வாத நோய் உள்ளவர்கள் தவிர்த்தல் நல்லது. இலந்தைப் பழம் சாப்பிட்டால் இரத்தத்தை சுத்தம் செய்வது மட்டுமில்லாமல், சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும். பசியையும் தூண்டும் தன்மை கொண்டது. இன்றைய காலகட்டத்தில் பெரும் அச்சுறுத்தல் இரத்தக் குழாய் அடைப்பு. இதனை சாதாரணமாய் தவிர்த்துவிடலாம் என்கிறது இயற்கை வைத்தியம். தினமும் ஒரு கப் தயிர் சாப்பிட்டு வந்தால் போதும் இரத்தக் குழாய் அடைப்பு நீங்கும். இதற்கடுத்தது இரத்தம் அழுத்தம். இதனை முற்றிலுமாக போக்க வழி உண்டு. கொதிக்க வைத்து ஆறிய நீரில் சீரகப் பொடி 12 நேரம் ஊறவைத்து குடித்து வந்தால் போதும். மேலும், ஒரு டம்ளர் மோரில் எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து சாப்பிட்டால் இரத்த அழுத்தம் சீர்படும். இதுதவிர, அகத்திக் கீரையை வாரம் 2 முறை சாப்பிட்டு வந்தாலும் இரத்தக் கொதிப்பு குணமாகும். இரத்தக்கட்டு, சுளுக்கு நிவர்த்தியாக, மஞ்சள், உப்பு, சுண்ணாம்பு ஆகியவற்றை வெந்நீர் விட்டு அரைத்து அந்த விழுதை சூடு செய்து சுளுக்கின் மீது பற்றுபோட்டால் போதும். விளாம்பழம் சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள கிருமிகள் அழிந்துபோகும். - Abi Abirami, Thanjai MJ Moorthy மற்றும் Peace Meditate உடன் பிடித்திருக்கிறது · · பகிர்தல் ·

வியாழன், 15 மார்ச், 2012


உங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா?


முன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம்.

ஒரு கட்டத்தில் கிணறுகள் குறைந்து அடிபம்புகள் வந்தன. அதற்கடுத்து ஜெட்மோட்டார்கள், சப்மர்சிபிள் என்று பூமியின் ஆழத்தில் கிடக்கும் மோட்டார் கொண்ட ஆழ்துளை குழாய் என்று படிப்படியாக உருமாறின.

இந்த மோட்டார்களில் எல்லாம் இல்லாத ஒரு சிறப்பம்சம் கிணற்றுக்கு உண்டு. அது, கிணற்றில் ஊறும் தண்ணீர் கண்ணாடி போல் நமது பார்வையில் தெளிவாக இருக்கும். உச்சி வேளையில் கிணற்று தண்ணீரில் சூரியனின் ஒளி பிரதிபலித்து சில நேரங்களில் கிணற்றின் அடி ஆழம் வரை தெரியும். இது ரம்மியமான காட்சியாக இருக்கும்.

இப்போது இப்படி இருந்த கிணறுகள் எல்லாம் பெரும்பாலும் மறைந்து விட்டன. கிராமப்புறங்களில் விவசாயத்திற்காக மட்டும் தான் தற்போது கிணறுகள் பயன்பாட்டில் உள்ளன.

கிணறுகள் திறந்த நிலையில் இருந்ததால், தண்ணீரில் ஏற்படும் மாற்றத்தை சுலபமாக தெரிந்து கொள்ள முடியும். உதாரணமாக, செழிப்பாக மழை பெய்திருந்தால் கிணற்றில் ஊறும் தண்ணீரானது எங்கள் வீட்டில் இருந்த கிணற்றில் செம்மண் நிறத்தில் இருப்பது வழக்கம்.
ஆனால் தற்போது உள்ள போர்வெல் குழாய்கள் நீரை இழுத்து நேரடியாக தொட்டியில் நிரப்புவதால் மாடிக்கு சென்று தொட்டியில் ஏறிபார்த்தால் மட்டுமே நீரின் தெளிவு, சுத்தம்,நிறம் போன்றவற்றை காண முடியும்.

எனவே, நம்மால் பல நேரங்களில் தண்ணீரின் இயல்பை தெரிந்து கொள்ள முடியாமல் அன்றாடம் பயன்படுத்திக் கொண்டு தான் இருக்கிறோம்.

ஆனால் தண்ணீரை பற்றி நாம் மிகவும் அவசியமாக தெரிந்து கொள்ள வேண்டிய சில விடயங்கள் இருக்கின்றன. அதை கேள்வி பதில் வடிவத்தில் தொகுத்துள்ளேன். தமிழக அரசின் நிலநீர்பிரிவு வெளியிட்டுள்ள இந்த தொகுப்பு சொல்லும் தகவல்கள் இதோ....

1.சமீபகாலமாக பல் காவி நிறமாகிறது. ஏன்?


நீங்கள் குடிக்கும் நீரில் புளோரைடு என்ற உப்பு அதிகமாக இருக்கலாம். இந்த புளோரைடு உப்பு பற்களை மஞ்சள் நிறமாக மாற்றும். குடிக்கும் நீரில் ஒரு லிட்டரில் 1.5 மி.கிராம் அளவிற்கு அதிகமாக புளோரைடு இருக்க கூடாது. இந்த அளவிற்கு மேல் புளோரைடு அதிகம் இருக்கும் நீரை கண்டிப்பாக குடிக்க பயன்படுத்த கூடாது.

2. புளோரைடு அளவுகோல் பற்றியும், அதன் விளைவுகள் பற்றியும் கூறவும்?

குறைந்த புளோரைடு அளவு என்பது (0.5-1.0 மிகிராம் லிட்டர்) இந்த அளவு இருந்தால் அது பற்களுக்கு பாதுகாப்பானது. இந்த அளவு புளோரைடு இருந்தால் அது பல் சொத்தை விழாமலும், பல்லில் துர்நாற்றத்தையும் தடுத்து விடுகிறது. ஆனால் 1.5 என்ற அளவை விட குடிநீரில் புளோரைடு அதிகம் இருந்தால் அந்த நீரை குடிப்பவர்களுக்கு பல் காவி நிறமாகும். உடலின் எலும்புகள் எல்லாம் பாதிக்கப்பட்டு முடக்குவாதம் என்ற நோய் உருவாகி செயலற்ற நிலைக்கு தள்ளப்படுவார்கள். புளோரசிஸ் என்ற நோய் ஏற்படும்.


3. பிறந்து ஆறு மாதம் ஆன சில குழந்தைகள் நீலமேறுதல் மற்றும் திடீரென்று இறந்து போவதின் காரணம் என்ன?


குடிக்கும் நீரில் அதிகமான நைட்ரேட்டு என்ற ரசாயன உப்பு இருந்தால் குழந்தைகள் திடீரென்று உடலில் நீலநிறம் பாய்ந்து இறந்து போவதுண்டு.


4. வீட்டின் மேல்நிலை தொட்டிகளில் அடிக்கடி பாசி படிகிறது. இது ஏன்?
காற்று,சூரிய ஒளி ஆகியவை தொடர்ந்து படும் மேல்நிலை தொட்டிகளில் இது போல் பாசி ஏற்படும். எனவே காற்று, சூரிய ஒளி படாமல் தண்ணீர் தொட்டிகளை நன்றாக மூடி வைத்திருக்க வேண்டும். கிணறுகளையும், நீர்தொட்டிகளிலும் சிறிதளவு பிளீச்சிங் பவுடர் கலக்கலாம். அதாவது 100 லிட்டர்தண்ணீருக்கு 30 விழுக்காடு திறன் உள்ள பிளீச்சிங் பவுடர் 1 கிராம் என்ற அளவில் சேர்க்கலாம்.

5. சில நேரங்களில் சமைக்கும் போது சோறு மஞ்சள் நிறமாக ஆகிவிடுகிறதே ஏன்?

நீரின் காரத்தன்மை (alkalinity) அதிகமாக இருந்தால் சோறு வேக வைத்த பின்பு மஞ்சள் நிறமாக இருக்கும். பருப்பும் சரிவர வேகாது.

6.நீரினை பிடித்து சேகரித்து வைக்கும் போது, மஞ்சள் நிறமாக இருக்கிறது. இந்த தண்ணீரில் துணிகளை துவைக்கும் போது காவி,பழுப்பு கறை ஏற்படுகிறது. எதனால்?

இது இரும்பு(iron) உப்பு இருப்பதால் நிகழ்கிறது. இரும்பு அகற்றும் சுத்திகரிப்பு முறைகளை பயன்படுத்தலாம். எளிமையான வடிவமைப்பு கொண்ட சுத்திகரிப்பு நீர் தொட்டிகளை பயன்படுத்தி இரும்பு சத்தை குறைக்கலாம்.


7. போர்வெல் தண்ணீரின் உப்புத்தன்மையை நீக்க தொட்டியில் தேத்தங் கொட்டை அல்லது நெல்லி மரக்கட்டையை போட்டு வைக்கலாமா?

தேத்தங்கொட்டை அல்லது நெல்லி மரக்கட்டை துவர்ப்பு சுவையுடையது. துவர்ப்பும், உப்பும் இருக்கும் போது நீரானது, உப்பு குறைந்துள்ளதாக தோன்றும். ஆனாலும் நீரில் குறைந்துள்ள ரசாயனங்களின் அளவில் மாற்றம் ஏற்படுவதில்லை.

8. கழிவறை தொட்டி (செப்டிக் டேங்க்) மற்றும் ஆழ்குழாய் கிணறு(போர்வெல்) இவற்றுக்கு இடையே இருக்க வேண்டிய இடைவெளி எவ்வளவு?
சுமார் 50 அடி இடைவெளி இருக்க வேண்டும்.

நீர்வழி நோய்களிலிருந்து தற்காத்துக் கொள்ள சில வழிமுறைகள்
நீரை கொதிக்க வைத்து, குளிர வைத்து, வடிகட்டி பின்னர் குடிப்பதற்கு பயன்படுத்தலாம்.

நோய் கிருமிகளை அழிக்க பிளீச்சிங் பவுடர் பயன்படுத்தலாம் (1000 லிட்டருக்கு 1 கிராம் என்ற அளவில்)
தொழிற்சாலை கழிவுகள், வீட்டு உபயோக கழிவுகள்(குப்பைகள்), கால்நடை கழிவுகள், நீர்நிலை ஆதாரங்களில் கலக்காமல் பாதுகாப்பான தூரத்தில் போர்வெல் அமைந்திருக்க வேண்டும்.

கைப்பம்புகள், குழாய்களை சுற்றி கழிவு நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குழாய், போர்வெல்லின் அடியில் குளித்தல், மாடுகளை கழுவுதல், துணிதுவைத்தல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.


புளோரைடு நீரில் இருக்கும் அளவை கண்டிப்பாக தெரிந்து கொள்ள நீரை பரிசோதனை செய்து பிறகு பயன்படுத்த வேண்டும்.

நீங்கள் சென்னைவாசி என்றால் கீழே உள்ள விலாசத்தில் உங்கள் போர்வெல் தண்ணீரை கொடுத்து அந்த தண்ணீரில் என்ன வகையான உப்புகள் எல்லாம் கலந்திருக்கின்றன.

அது குடிக்க உகந்ததா என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்.

இது தவிர தமிழக்கத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் நீர் பரிசோதனை கூடங்களை அரசு அமைத்துள்ளது. அங்கே சென்று நீரின் தரத்தை பரிசோதித்து கொள்ளலாம்.

உதவி இயக்குநர், (நில வேதியியல்)
நிலவேதியியல் உட்கோட்டம்,தரமணி,பொதுப்பணித்துறை வளாகம்,தரமணி, சென்னை-600113போன்:044-22541373

செவ்வாய், 21 பிப்ரவரி, 2012


"ஹெர்னியா". இது பல பேருக்கு தெரியாத ஒரு விஷயம் ஆம் ஹெர்னியா ஒரு நோய் இல்லை இது ஒரு ரிப்பேர் தான். ஆம் சிம்பிள் ஹார்ட்வேர் ரிப்பேர் மாதிரி, ஒரு எக்ஸ்டர்னல் இஞ்சூரி மாதிரி தான் இதுவும். நம் நெஞ்சு எலும்புக்கும், பிறப்புருப்புக்கும் ஒரு பை போன்ற தசை வயிற்றின் கீழ் பகுதியில் இருக்கும் இந்த மெஷ் ( ஒரு ஹாமோக் போல ) இருக்கும் இந்த தசைதான் நம் குடலை தாங்கிபிடிக்கும் ஒரு பை போன்றது. இந்த தசை கொஞ்சம் ஸ்ட்ராங்காக இருக்கும் ஒரு பையை போன்றது. இந்த தசை டேமேஜ் ஆகும்பட்சத்தில் குடல் இறங்கி இது தான் குடல் இறக்கம் எனக்கூட அழைக்கப்டுகிறது. தொப்புள் கொடிக்கு நேர் கீழே தான் இந்த தசை கிழியும் வாய்ப்பு உள்ளது. இது சிலருக்கு மோசமாகி சிறு நீர் பை டேமேஜ் ஆகி பிறப்புறுப்பு அருகே மிகுந்த வீக்கத்துடன் இருக்கும்.

மொத்தன் ஐந்து வகை ஹெர்னியாக்கள் தான் ஃபேமஸ்

1. Inguinal hernia / 2. Incisional hernia / 3. Femoral hernia / 4. Umbilical hernia / 5. Hiatal hernia

சில பாடி பில்டர்ஸ், வெயிட் தூக்கும் சாம்பியன்ஸ், கடினமாக உழைக்கும் மூட்டை தூக்கும் தொழிலாளிக்கு தான் இந்த ஹெர்னியா வரும் என சிலர் நினைப்பர். சிலர் நன்கு சாப்பிட்டு ஒரு ஹெவி தும்மல் அல்லது தும்மலுடன் சேர்ந்த இருமல் வந்தாலும் இந்த தசை கிழிந்து ஹெர்னியா வரும் ஆபத்து உண்டு. சிலருக்கு ஹெர்னியா இருப்பது தெரியவே தெரியாது. ஆனால் சிலருக்கு வலி சும்மா அடி பின்னி எடுத்துவிடும். சில ஆண்களுக்கு விரை வீக்கம் மற்றூம் சின்ன லம்ப் எனப்ப்டும் கட்டி போன்ற ஒன்று இருக்கும் பட்சத்தில் உடனே சர்ஜரி தான் சரியான வைத்தியம்.

பெண்களுக்கு இது வரும் காரணம் முக்கியமாக ஓவர் வெயிட், வயிறு பகுதிகளில் வெயிட் போடுவது, அடிக்கடி பிரசவித்தல், அஸ்சைட்ஸ் எனும் திரவகம் அதிகமாக வயிற்றில் சுரத்தல், இயற்கை பிரசவம் சரியாக ஆகாமல் நிறைய நேரம் துடிக்கும் போது, வைற்றில் பெரிய கட்டி போன்ற விஷயங்களுக்கு கண்டிப்பாக ஹெர்னியா நிச்சயம். பெண்கள் புகை பழக்கம் கூட மெயின் ரீஸன் அதனால் இது ஆண்களுக்கு மட்டும் வரும் ஒரு பிரச்சினை இல்லை. சாப்பிட்ட பிறகு வயிற்றின் பெல்ட், பேன்ட், மற்றும் பாவாடை, சுரிதார் பாட்டத்தை அட்ஜ்ஸ் செய்யவே கூடாது. சாப்பிடும் முன் செய்யலாம் அல்லது சாப்பிட்ட பிறகு 2 மணி நேரம் கழித்து செய்யலாம். கர்ப்பபை எடுத்த தாய்மார்களுக்கு ஹெவியாக வேலை செய்தால் ஹெர்னியா நிச்சயம்.

ஹெர்னியா இருந்தால் வலி மற்றும் அதிகம் தொல்லை இல்லாததால் உடனே அவர்கள் அறுவை சிகிச்சை செய்ய மறந்துவிடுவார்கள். ஆனால் உடனே செய்வது மேலும் தசை கிழியாமல் தடுக்க இயலும். ஒரு ஆர்டிஃபிஸியல் மெஷ் வைத்து பழைய மாதிரி தைத்து விடுவார்கள். எனக்கு தெரிந்து டாக்டர்கள் அந்த சமயம் அப்பன்டிக்ஸ் இருந்தால் அதையும் எடுத்து விடுவார்கள். அதிக கொழுப்பையும் முடிந்த வரை எடுத்து விடுவர்கள். இப்பல்லாம் ஃபுல் அறுவை சிகிச்சை தேவை யில்லை லேப்ராஸ்கொபிக் சர்ஜரி (துழை) போதும், ரத்த சேதம் அதிகம் இல்லை மற்றூம் 3 நாட்களீல் டிஸ்சார்ஜ் ஆகலாம். அப்புறம் குடம் மற்றும் வெயிட் தூக்கவே கூடாது. அப்படி தூக்கினால் அந்த மெஷூம் கிழிந்து இன்னொரு ரிப்பேர் சர்ஜரி தேவை. முடிந்த அளவு ஹெல்தியா இருந்தா இது வர்ரது கஷ்டம் அல்லது நல்ல அப்டமன் கரன்ச் செய்தால் கூட இந்த சதையை ஸ்ட்ராங்காக வைத்து கொள்ளலாம். சாப்பிட்ட அரை மணி நேரத்திற்க்கு எந்த வேலையும் கண்டிப்பாக செய்ய வேண்டாம், நடப்பது கூட. முட்டியை மடக்கி வெயிட் தூக்குவது இன்னொரு கேர்ஃபுல் அட்வைஸ்...!

செவ்வாய், 7 பிப்ரவரி, 2012


இன்று சிம்பிள் சைன்ஸில் நாம் பார்க்க போவது போன் மேரோ..... நிவாரனமே இல்லை என நினைத்த பல நோய்களுக்கு அற்புத நிவாரனி இந்த போன் மேரோ ஆம் 1968 ஆம் ஆண்டு தான் இதை பயன்படுத்தி வெற்றி கண்டனர். இந்தியாவுக்கு இது தெரிய ஆரம்பித்தது என்னவோ 2002 தான். லுக்கிமியா,அப்பளாஸ்டிக் அனிமியா, லிம்ப்ஹோமாஸ், ஹாட்கின் டிஸிஸ்,மல்டிபிள் மைலோமா, உடம்பின் இம்மியூன் டிஸார்டர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதாம். அது போக மார்பக புற்று நோய், மற்றூம் கருப்பைக்கு உள்ளே இருக்கும் ஒவேரியன் புற்று நோய்க்கு ஆப்ட் மருந்து. ஒவ்வொரு வருடமும் லட்சக்கனக்கில் மக்கள் இந்த போன் மேரோவால் காப்பற்ற பட்டாலும் இன்னும் உலகின் 70% சதவிகித மக்களுக்கு சரியான போன் மேரோ கிடைக்கமல் அவதி படுகின்றனர்.

போன் மேரோ என்பது நம் எலும்பில் உள்ள ஒரு வகை பஞ்சு போல் இருக்கும் ஒரு விஷயம் தான். மார்பக எலும்பு, தலை(மன்டை ஓடு),இடுப்பு எலும்பு, ரிப்கேஜ், மற்றூம் முதுகு தண்டு பகுதியில் உள்ள எலும்புகளில் இரண்டு வகை ரத்த செல்கள் உற்பத்தி ஆகின்றன. இதில் வெள்ளை நிறத்தில் இருக்கும் செல்களின் பெயர் லியோக்கசைட்ஸ் - இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் செல்கள், சிவப்பு நிறத்தில் இருக்கும் செல்களின் பெயர் - எரித்ரோசைட்ஸ், இது நமது உடம்பின் உள் தேவைப்படும் ஆக்ஸிஜனை கொடுப்பதும் மற்றும் தசை, மற்ற உறுப்புகளின் கழிவுகளை வெளியேற்றும் ஒரு அற்புத வேலையை செய்கிறது. இதை ரெட் போன் மேரோ, யெல்லோ போன் மேரோ என்ற டெக்னிக்கல் நேம் உண்டு.

நான் மேற்கூரிய நோய்கள் ஏதாவது உங்களுக்கு வந்தால் அதனால் சில பாகங்கள் செயலிழுக்கும், அது போக புற்று நோயின் தாக்கம் எல்லோர்க்கும் தெரியும் அதனால் கீமோ தெரபி பண்ணினால் தான் இது கட்டுபாட்டுக்குள் வரும், இது ஏற்பட காரணம் ரெட்செல்களின் உபயோகமில்லா தன்மை தான் அதனால் போன் மேரோ செய்தால் 100% சதவிகிதம் நீங்கள் புற்று நோயில் இருந்து கூட குணம் பெற இந்த போன் மேரோ செல்கள் உபயோகபடுகின்றன. ஒரு சராசரி மனிதன் 70 கிலோ இருந்தால் அவன் உடம்பில் சுமார் 3 கிலோ அல்ல்து 4% சதவிகிதம் போன் மேரோ இருக்கும்.பிறக்கும் போது எல்லா போன் மேரோவும் சிவப்பாக இருந்து காலபோக்கில்தான் மஞ்சளாக மாறும்.

போன்மேரோ டோனர்கள் நிறைய இருந்தாலும் இதை நம் உடம்புக்கு மேட்ச் செய்வது தான் பெரிய விஷயம். இது மேட்ச் ஆனாலும் இதை உடம்பில் செலுத்துவது நரக வேதனை, இதை ஆப்ரேஷன் தியேட்டரில் செய்ய வேண்டிய அவசியம் இல்லை சாதாரன தனி ரூமில் செலுத்தலாம்,இந்த போன் மேரோ செயவதற்க்கு முன் பல டெஸ்ட்கள் உள்ளன, அதில் குறிப்பாக மனநல மருத்துவர் கவுன்சலிங், ஏன் என்றால் முதுகு தண்டு அல்ல்து இடுப்பின் எலும்பில் ஊசியை கொண்டு முதலில் கெட்ட செல்களை வெளியே எடுத்து பின்பு போன்மேரோ செல்களை உள் செலுத்துவார்கள் மயக்க மருந்து மற்றூம் அனஸ்தீஸியா இல்லாமல் முதல் மூனு வாரங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அது செட்டாகி போன பிறகு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி செல்கள் உருவாகி பின்பு 100% குணமடைய 3 - 9 மாதங்கள் பிடிக்கும். இது கொஞ்சம் காஸ்ட்லியான பிராசஸ் கூட. பல நாடுகளில் சிங்கம் முதல் சுறா வரை சில சீக்ரட் ரெசிப்பி சாப்பாட்டுவைகைகள் இந்த போன் மேரோவை வளர்ப்பதாக ஒரு கூடுதல் தகவல். நம்மூர் ஆட்கள் நல்லி எலும்பு மற்றூம் சில எழும்புகளை உள்ளே இருப்பதை தட்டி தட்டி உறுஞ்சும் போது ஒரு வகை பிரவுன் கலர் கூழ் சாப்பிட்டா கூட போன்மேரோ செல்கள் வளரும் என நம்பிக்கை.

சனி, 4 பிப்ரவரி, 2012


உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைத்து ஆரோக்கியத்தை அதிகரிப்பதில் அக்ரூட்டுக்கு முதலிடம் கொடுக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். உடலில் கொழுப்பின் அளவு அதிகரித்தால் மாரடைப்பு உள்ளிட்ட இதய பாதிப்புகள் தாக்கும் அபாயம் ஏற்படும். உடல் பருமன் மற்றும் கொழுப்பு சத்தால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு உணவு முறைகளே முதல் காரணமாக கூறப்பட்டாலும் போதிய உடற்பயிற்சி இன்மையும் ஒரு காரணம். இந்நிலையில் இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் ‘வால்நட்’ எனப்படும் அக்ரூட் கொட்டை உடல் கொழுப்பை எளிதில் கரைத்து ஆரோக்கியத்தை அதிகரிப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பென்சில்வேனியாவில் உள்ள ஸ்க்ராட்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இது தொடர்பாக ஆய்வு நடத்தினர். உடலில் கொழுப்பு அதிகம் இருந்த ஆண், பெண் ஏராளமானோர் வயது வித்தியாசமின்றி தேர்வு செய்யப்பட்டனர். முதல்கட்ட பரிசோதனைகளை தொடர்ந்து ஒரு வார காலம் அக்ரூட் பருப்புகள் கொடுத்து கண்காணிக்கப்பட்டனர். அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவு குறைந்திருந்தது. இதன்மூலம் கொழுப்பை அக்ரூட் கரைக்கும் என்பது உறுதி செய்யப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஆய்வு முடிவு குறித்து வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் வருமாறு: உடலில் கொழுப்புச்சத்து அளவாக இருப்பது அவசியம். உணவு முறைகளே உடலில் கொழுப்பு அதிகரிக்க முக்கிய காரணம். அக்ரூட், உடல் கொழுப்பை எளிதில் கரைக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. முந்திரி, பாதாம் உள்ளிட்ட சுமார் 7 வகையான கொட்டைகளுடன் ஒப்பிடும் போது அக்ரூட்டில்தான் ஆன்டி ஆக்சிடன்ட்கள் அதிகம் உள்ளது. குறிப்பாக பாலிபெனால் என்ற ஆன்டிஆக்சிடன்ட் அபரிமிதமாக இருப்பதுதான் இதற்கு காரணம். இவை கொழுப்பை எளிதில் கரைக்க வல்லது என்பதுடன் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். இது நோய்த்தாக்குதலில் இருந்து பாதுகாப்பு அளித்து ஆரோக்கியத்துக்கு வகை செய்யும். உரிய உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி, மருத்துவ அறிவுரை மற்றும் சிகிச்சைகள் மூலம் உடல் கொழுப்பை கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.